கேலக்ஸி தனது பயணத்தில் அடுத்த மைல் கல்லாக, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதுதான் ‘விண்மீன்‘ மின்னிதழ். காலாண்டிதழாக தொடங்கப்பட்ட முதல் இதழுக்குக் கிடைத்த வரவேற்பும், மாத இதழாக மாற்றுங்களேன் என்ற வாசகர்களின் விண்ணப்பமும் ஒரு சேர, இரண்டாவது இதழிலேயே மாத இதழாக மாற்றம் பெற்றது.
உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். குறிப்பாக புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறோம். சிறந்த எழுத்தாளர்களின் நேர்காணல், புத்தக விமர்சனங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என கொஞ்சம் வித்தியாசமான பக்கங்களை வாசகர்களுக்கு அளிக்கிறோம். இந்த இதழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


