VinmeenBooks.comVinmeenBooks.comVinmeenBooks.com
Notification Show More
Font ResizerAa
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Reading: சோளகர் தொட்டி
Share
Font ResizerAa
VinmeenBooks.comVinmeenBooks.com
Search
  • முகப்பு
  • இலக்கியம்
    • சிறுகதைகள்
    • கட்டுரைகள்
    • கவிதைகள்
    • திரைப் பார்வை
    • புத்தகப் பார்வை
    • குறுநாவல்
    • தொடர்கள்
    • நேர்காணல்
  • விண்மீன் மின்னிதழ்
  • நிகழ்ச்சிகள்
  • எழுத்தாளர்கள்
  • ஆசிரியர் பக்கம்
    • அறிவிப்பு
  • நாம்
Have an existing account? Sign In
Follow US
VinmeenBooks.com > Blog > புத்தகப் பார்வை > சோளகர் தொட்டி
புத்தகப் பார்வை

சோளகர் தொட்டி

R.சுபாஷினி
Last updated: June 18, 2026 1:27 pm
2 Views
Share
3 Min Read
சோளகர் தொட்டி
சோளகர் தொட்டி
SHARE

சோளகர் தொட்டி

 

 

ஆசிரியர்: ச. பாலமுருகன்

 

இந்நூலின் ஆசிரியர் ச.பாலமுருகன் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். கோவையில் வழக்குரைஞராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தோடு இணைந்து, பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கிய முக்கியமானவர்களுள் ஒருவர். பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள்ள பிணைப்பை இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.

 

வீரப்பன் உலவிய காடுகளில் வாழும் பழங்குடித் தமிழர்களே சோளகர்கள். தொட்டி அவர்கள் வாழும் ஊராகும். நாகரிகத்தின் பயனாய் விளைந்திருக்கும் சீரழிவுக்கு உட்படாத உண்மையும் எளிமையும் இயற்கையோடு இயைந்த மக்கள் நாயக வாழ்க்கை முறையும் கொண்ட அப்பழங்குடித் தமிழர்கள் வீரப்பன் தேடுதல் வேட்டையில் சிக்கிச் சிதைந்து போன துன்பியல் நிகழ்வுகளை இலக்கியப் படைப்பாக்கியிருக்கிறார் பாலமுருகன் எனப் புத்தகத்தின் முன்னுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

 

இந்தியா டுடே எழுதியதைப் படித்த பிறகு புத்தகத்தின் இரண்டாம் பகுதியைப் படிக்கும் துணிவே எனக்கு அற்றுப் போனது. உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது என்பது உண்மை. ஆனால் அதை முதல் பாகம் படித்த பின்புதான் படித்தேன். எனவே இரண்டாவது பகுதியை படிக்கும் கட்டாயத்துக்கு உள்ளானேன்.

 

சோளகர்கள் பற்றிய இந்நாவல் அவர்களைப் பற்றி அறியாத பாவிகளான நமக்கே எழுதப்பட்டது என்றும், இந்நாவலைப் படித்ததும் மலைவாழ் மக்களுக்கு எதேனும் செய்ய வேண்டும் என்ற துடிப்பு நமக்குப் பிறக்கும் என்றும், அதுவே ஓர் அருமையான படைப்பிலக்கியத்தின் வெற்றி என்றும் அருணன் கூறுகிறார்.

 

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் வி. பி. குணசேகரன் பதிப்புரை எழுதி இருக்கிறார். மக்கள் இந்த நாவலுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்நாவல், 2019-ல் 12 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இதுவே மக்களின் ஆதரவுக்கு சாட்சி.

 

சோளகர்களை நன்கு அறிந்த ஆசிரியர், அவர்கள் வாழ்க்கை முறையைப் பதியாமல் விட்டுவிட்டால், அது பிற்காலத்தில் கற்பனையாக நினைக்கப்பட்டு விடக்கூடும் என்ற அச்சத்தினாலேயே இதை எழுத முன்வந்ததாய் என்னுரையில் கூறுகிறார்.

 

புத்தகம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் பாகம் இதமாகவே இருக்கிறது. பழங்குடியினரின் வாழ்க்கை முறை மிக எளிது. எந்த நேரத்திலும் அவர்கள் அதை சிக்கலாக்கிக் கொள்வதில்லை. கூட்டமாய் வாழ்வதும், கூடி வாழ்வதும் இவர்கள் சிறப்பு. பிடித்திருந்தால் திருமணம் செய்வதும், பிடிக்காவிட்டால் விலகுவதும் இவர்களின் பழக்கம்.

 

குழந்தை இருந்த போதும் மறுமணம் என்பது தடையில்லை. அதே மாதிரி கணவனின் தம்பியை மறுமணம் புரிவதும் அங்கீகரிக்கப்படுகிறது.

 

காடு அவர்களுக்குத் தாய் வீடு. பறவைகள், விலங்குகள் போல் காட்டில் பயமின்றிச் சுற்றித் திரிகிறார்கள். மிக அழகான உலகம் அவர்களுடையது.

 

புயலாக வீரப்பன் நுழைய, அவனைப் பிடிப்பதற்காக வரும் இரு மாநிலத்து காவல்துறையின் அட்டகாசங்கள் என விரியும் கதையை… ஐயோ… விவரிப்பதற்கும் கூட துணிவு வேண்டும். நகரத்தில் வாழ்வதாய் பெருமைப்படுகிறோம். இல்லை இது நரகம். வாழ்வில் மறக்க முடியாத நாவல். ஏன் படித்தோம் எனத் துவளச் செய்கிறது. கலைந்த குருவிக் கூடாய் அவர்கள் வாழ்க்கை. எல்லாவற்றையும் இழந்து உயிர் மட்டும் சுமந்து வாழ்வதோடு கதை முடிகிறது.

 

நான் இதை ரசித்துப் படித்தேன் என்று சொல்ல முடியாது. என் வாழ்க்கையில் மறுபடி படிக்கவே விரும்பாத புத்தகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, கஷ்டப்படுவதாக நினைத்து தனக்குத்தானே சுய இரக்கம் கொள்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகமிது.

 

அமேசானில் அச்சுப் புத்தகமாகவும், கிண்டில் பதிப்பாகவும் கிடைக்கிறது. வேறு சில பதிப்பகங்களும் வெளியிட்டிருக்கின்றன.

 

சோளகர் தொட்டி – ஒரு வாழ்வியலின் துன்பத்தைச் சொல்லும் நிஜக்கதை.

PrevPreviousசெம்மீன்
Nextசந்தியா ராகம்Next

You Might Also Like

இடியாப்பமும் ஃப்ராடும்
குருதி…
ரஸவாதம்
ஜீவநதி
குருவிக்கூடு
TAGGED:சிறுகதைகள்நாவல்நூல் அறிமுகம்புத்தகப் பார்வைபுத்தகம்விண்மீன் ஆகஸ்ட் 2025விமர்சனம்
ByR.சுபாஷினி
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தெடாவூர் கிராமத்தில் பிறந்த இவர், தமிழ் இலக்கியத்தை முதுகலைப் பாடமாகப் படித்திருக்கிறார்.
முகநூலில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் என்று பயணத்தைத் தொடங்கியவர் இப்போது  தன் நூல்களை மின் நூல்களாகவும், அச்சு நூல்களாகவும் வெளியிட்டு வருகிறார்.
இரண்டு சிறுகதைகளும், இவர் நூலைப் பற்றிய விமர்சனம் ஒன்றும் பாரம்பரியமான கல்கியில் வந்ததைப் பெருமையாகக் கருதுகிறார். ‘லேடீஸ் ஸ்பெஷல்’ மற்றும் ‘சங்கப்பலகை’முகநூல் குழுமமும் சேர்ந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவர் குறுநாவல் ஒன்று பரிசு பெற்றிருக்கிறது.
Previous Article செம்மீன் செம்மீன்
Next Article சந்தியா ராகம் சந்தியா ராகம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பதிவுகளைத் தேட

வகைமை

ஆசிரியர் பக்கம் (13) கட்டுரைகள் (21) கவிதைகள் (29) குறுநாவல் (1) சிறுகதைகள் (75) திரைப் பார்வை (8) தொடர்கள் (15) நிகழ்ச்சிகள் (5) நேர்காணல் (12) புத்தகப் பார்வை (38) விண்மீன் மின்னிதழ் (13)

பதிவுகள்

  • July 20263
  • June 202618
  • May 202619
  • April 202621
  • March 202613
  • February 202612
  • January 202622
  • December 202513
  • November 202517
  • October 202520
  • September 202514
  • August 202516
  • July 202518
  • June 202523
  • August 20211

பிரிவுகள்

essays (21) Interview (12) Poems (29) Series (15) Short Stories (76) ஆசிரியர் பக்கம் (13) இளையராஜா (2) கட்டுரை (12) கட்டுரைகள் (20) கவிதைகள் (29) குறுங்கதை (14) குறுநாவல் (1) கேலக்ஸி (3) சினிமா (9) சிறுகதைகள் (81) தலையங்கம் (13) திரை விமர்சனம் (8) துபை (1) தொடர்கள் (15) நாவல் (7) நிகழ்ச்சி (5) நிஸ்வா (11) நூல் அறிமுகம் (38) நூல் வெளியீடு (4) நேர்காணல் (12) பாண்டியன் பொற்கிழி (1) புத்தகப் பார்வை (38) புத்தகம் (38) பெருங்கதை (1) பேட்டி (12) மதுரை (3) மின்னிதழ் (13) விண்மீன் (13) விண்மீன் ஃபெப்ரவரி 2026 (12) விண்மீன் அக்டோபர் 2025 (19) விண்மீன் ஆகஸ்ட் 2025 (16) விண்மீன் ஏப்ரல் 2026 (21) விண்மீன் செப்டம்பர் 2025 (14) விண்மீன் ஜனவரி 2026 (20) விண்மீன் ஜூன் 2025 (18) விண்மீன் ஜூன் 2026 (19) விண்மீன் ஜூலை 2025 (18) விண்மீன் டிசம்பர் 2025 (12) விண்மீன் நவம்பர் 2025 (16) விண்மீன் மார்ச் 2026 (12) விண்மீன் மே 2026 (17) விமர்சனம் (46) வெண்பா (2) ஹைக்கூ (3)
மின்னிதழ்

விண்மீன் மின்னிதழ் வாசிக்க

Subscribe to our e-magazine Click Here

Follow US

Find US on Social Medias
FacebookLike
YoutubeSubscribe
WhatsAppFollow

Categories

  • சிறுகதைகள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • திரைப் பார்வை
  • புத்தகப் பார்வை
  • தொடர்கள்
  • நேர்காணல்

About US

தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் வளமையையும், இலக்கியத்தின் செழுமையையும் உலகெங்கும் பரப்பும் நோக்கோடு கேலக்ஸி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Quick Link
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index
Top Categories
  • My Bookmark
  • InterestsNew
  • Contact Us
  • Blog Index

Statistics


Loading

© 2026 Galaxy Book Sellers & Publishers. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?