முனைவர் என். நாகராஜன்

துருவ நிலா (முனைவர். என்.நாகராஜன்)
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் புஞ்சை புளியம்பட்டியில் பிறந்தவர். மின் அணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்வராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஆழமான படிப்பும், செறிவான சிந்தனையும், எளிய நடையும், சமூக அக்கறையும் இவரது பலங்கள்.
இவர் சிறுகதைகள், குமுதம், தினமலர் வார இதழ்களில், மாலைமலர் நாளிதழில் வெளிவந்துள்ளன. 2011ல் வெளியான இவரின் ‘மகளே, என்னை மன்னிப்பாயா? என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு சென்னையிலுள்ள கவி ஓவியா என்ற மாத இதழால் அந்த ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அடுத்து, 2015 ஆம் ஆண்டில் திரு. சிவகுமார் பழனியப்பனுடன் சேர்ந்து எழுதிய ’பொறியாளர் ஆகுங்கள்… பொறியியல் பட்டத்திற்கு மட்டுமல்ல’ என்ற  நூல் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு ‘தனிமையில் ஒரு கோயில்’ என்ற இரண்டாம் சிறுகதை தொகுப்பை வெளியிட்டார். மேலும் ‘குறள் வழி நின்றவர்கள்’ என்ற நூலின் முதல் பாகம் 2017ஆம் ஆண்டிலும், இதன் இரண்டாம் பாகம் அமெரிக்காவில் வசிக்கும் அவருடைய  மாணவரான விகாஷ் அச்சுதராமையாவுடன் சேர்ந்து 2023 ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் இவரது மூன்றாவது சிறுகதை தொகுப்பான ‘பொம்மைகள் சரிந்த கோபுரம்’ மற்றும் ‘முகங்கள் நாடும் முகமூடிகள்’ என்ற முதல் புதினமும் வெளியிடப்பட்டன.
1 Article