பெண்ணாகடம் பா. பிரதாப்

எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப் அவர்கள் ஒரு தனியார் பள்ளி ஆசியராகப் பணிபுரிகிறார். இவர் இதுவரை நவபாஷாணன், நாக புராணம், ரகசியம் சிவ ரகசியம், சதுரகிரியில் இச்சாதாரி நாகினி, ரஜினியின் ஆன்மீகம், புத்தக மோகினி பாகம்-1, பொக்கிஷம், ஒரு கடிதத்தின் கதை, பெண்ணாகடம் பா.பிரதாப் சிறுகதைகள்,உன் கண்ணில் என் கவிதைகள்(கவிதை தொகுப்பு) உள்ளிட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமானுஷ்யக் கதைகள் எழுதுவதில் கில்லாடியான இவர் ‘சதுரகிரியில் இச்சாதாரி நாகினி’ ‘அஷ்ட நாகன்’ போன்ற தொடர்களை இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார், எழுதி வருகிறார். சிந்தனை சிற்பி ‘சிங்கார வேலர்’ என்னும் விருதைப் பெற்றிருக்கிறார். எழுத்தாளர் திரு.இந்திரா செளந்தர் ராஜன் அவர்களின் மானசீக மாணவன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர் இவர்.
1 Article