கீதா, பெங்களூர்

பிறந்த ஊர் நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம் என்றாலும் திருநெல்வேலி மாவட்டம் தான் குடும்பத்து ஊர் என்பதால் இரண்டு மாவட்டங்களையுமே என் மண் என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி. தற்போது இருப்பது பெங்களூர். பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம். பாடப் புத்தகங்களை விட கதைகள், கட்டுரைகள் வாசிக்கும் ஆர்வமும் எழுத்தார்வமும் இருந்தாலும் அக்காலகட்டத்தில், பொதுவெளியில் அல்லாமல் ஒரு சில எழுதியிருந்தாலும், குடும்பச் சூழலிலினால் அதை முன்னெடுக்கவோ, முன்னிலைப்படுத்தவோ முடியவில்லை. 2013ல் நண்பர் துளசிதரனுடன் வலைப்பூ தொடங்கியதிலிருந்துதான் எங்கள் தளத்திலும், எங்கள் ப்ளாக் எனும் தளத்திலும் ஏதோ எழுதத் தொடங்கி எழுதுகிறேன். மற்றபடி என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள பெரிதாக எதுவுமில்லை - கீதா
1 Article