பொம்மிகளைத் திட்டக்கூடாது. அவர்கள் நமக்கு கிடைத்த வரம் அல்லவா? அவர்களைத் திட்டினால், நாம்தான் வருத்தப்படுவோம். கடைசியில் மிஞ்சப்போகும் வலியும் வேதனையும் நமக்குத்தான். ஆகவே பொம்மிகளை ஒருபோதும் திட்டக்கூடாது.
இன்று காலை, பொம்மி என் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் கையில் கலர் பென்சில். அதுவும் கூர்மையாக இருந்ததைக் கவனித்தேன். அதை அவளிடமிருந்து வாங்கி, கூர்மையைக் கொஞ்சம் மொன்னையாக்கிக் கொடுக்க முயன்றேன்.
கலர் பென்சிலை அவளிடமிருந்து வாங்கியதுதான் தாமதம்; என்ன நினைத்தாளோ தெரியவில்லை. முரண்டு பிடிக்கிறேன் என்று என் கண்ணைக் குத்திவிட்டாள். வலி தாங்க முடியவில்லை. கோவம் வந்துவிட்டது.
குழந்தை என்றும் பாராமல் ரொம்பவும் திட்டிவிட்டேன். மனமும் வலிக்கிறது. கண்ணும் வலிக்கிறது.
“ஐயோ… எந்தக் கண்ணைக் குத்தினாள்…”
“அவளை திட்டுவதற்கு முன் வலது கண்ணையும் திட்டிய பிறகு இடது கண்ணையும்…


