மருதமுனையூரான்

ஜவ்ஸன் அஹமட்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் மருதமுனை கிராமத்தில் 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பிறந்தேன். கல்வியும் இலக்கியமும் பின்னிப் பிணைந்த ஒரு சூழலில் வளர்ந்த நான், எனது ஆரம்பக் கல்வியை கமு/ புலவர்மணி சரீபுத்தீன் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை மருதமுனை கமு/ அல்மனார் தேசிய பாடசாலையிலும் கற்றுத் தேர்ந்தேன்.
இறைஞானம் மற்றும் அறநெறிக் கல்வியின் பால் கொண்ட ஈர்ப்பினால், மூதூர் பஹ்ஜதுல் உலூம் அரபுக் கல்லூரியில் இணைந்து 'அல் ஆலிம் மௌலவி' கற்கை நெறியைப் பூர்த்தி செய்து 2021 ஆம் ஆண்டு பட்டம் பெற்றேன்.
ஊடகத்துறையின் மீதுள்ள ஆர்வத்தினால், இலங்கை கம்பனி சட்டம் மற்றும் ஊடக பேரவையினால் அங்கீகாரம் பெற்ற ஸ்கை தமிழ் (Sky Tamil) ஊடக வலையமைப்பில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறேன் அதன் ஒரு அங்கமான 'துணிந்தெழு' சஞ்சிகையின் வளர்ச்சிக்காக கடந்த ஐந்து வருடங்களாக ஆசிரியர் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பங்காற்றிவிட்டு, இந்த ஆண்டிலிருந்து (2026) அதன் இணை ஆசிரியராகப் பொறுப்பேற்று எனது பணிகளைத் தொடர்ந்து வருகின்றேன்.
இச்சந்திகையில் பேசும் பேனாக்கள் எனும் தொடர் பகுதியின் ஊடாக வாசகர்களின் பெரும் வரவேற்பு பெற்றதுடன் அதில் எழுத்தாளர்கள் உடைய நூல்களை அறிமுகம் செய்வதிலும் நூல்களுக்கான விமர்சனம் செய்வதிலும் எனக்கான தனி இடத்தை தனித்துவப்படுத்தி இருக்கிறேன்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் "கவிப்பொய்கை" எனும் புனைப்பெயரில் நான் பரவலாக அறியப்படுகிறேன்.
இலக்கிய இதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் அரச பத்திரிகைகளில் கவிதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், நூல் விமர்சனங்கள் என இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களில் எனது பேனா இயங்கி வருகின்றது.
இதுவரை எனது படைப்புகளாக மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன
● கவிப்பொய்கை (2022): புலனம் ஊடாக வெளியிடப்பட்ட கவிதை மின் நூல்.
● என் கவிதை என்ன விலை (2023): எனது முதல் அச்சு வடிவிலான கவிதை நூல்.
● புதுக் கனவுகள் (2025): அண்மையில் வெளியான கவிதைத் தொகுப்பு.
தொடர்ச்சியான எழுத்துப் பணியின் மூலம் சமூக மாற்றத்திற்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்வதையே எனது நோக்கமாகக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
தொடர்புகளுக்கு: முஹம்மது ஜலீல் ஜவ்ஸன் அஹமட், இல. 148, வீசி வீதி, பெரிய நீலாவணை 02. தொலைபேசி: 0754689813 / 0760200387
1 Article